உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திச் சென்ற லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை (டி.என்.46 - எல்.5601) சோதனை செய்தனர். அதில், கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ