உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சனி பிரதோஷ வழிபாடு

சனி பிரதோஷ வழிபாடு

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபி ஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவான்சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், 11:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அபி ேஷகம் நடந்தது. பகல் 2:30 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். மாலை 4:00 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

திட்டக்குடி

திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சந்திர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை