உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவட்ட அளவிலான விளையாட்டு நிறைவு போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டு நிறைவு போட்டி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில், புவனகிரி குறுவட்ட விளையாட்டு நிறைவு போட்டிகள் நடந்தது. 2025--2026ம் கல்வியாண்டிற்கான, புவனகிரி குறுவட்ட நிறைவு போட்டிகளான கேரம் மற்றும் கடற்கரை கையுந்து பந்து போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதுக்கான மாணவர்களுக்கு, பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, குறுவட்ட நிறைவு போட்டியை, துவக்கி வைத்தார். இப்போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நடுவராக வெற்றிவேந்தன், தமிழ்மணி, பொன்குரு, சீத்தாராமன் இருந்தனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜ்குமார், சிவக்குமார், அருள்வசந்த், மங்கையர்கரசி, சுதா, வனிதா, திலீப்குமார், செந்தில்குமார், புவனசுந்தர், நளினி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். புவனகிரி குறுவட்ட இணை செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை