உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

பெண்ணாடம் : பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பஸ் பயணிகள் அவதியடைகின்றனர்.பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்கள் என உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, திருச்சி, கடலுார், சேலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியில்லாததால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை