உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையையொட்டி, மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் நேற்று காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், 6:00 மணிக்கு தனுர் மாத பூஜை, 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை