நெல்லிக்குப்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை சேர்மன் துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாமை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில், ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று, வழங்கினார். முகாமில், நகர்மன்ற துணைத்தலைவர் கிரிஜா,கமிஷ்னர் கிருஷ்ணராஜன்,மேலாளர் சரவணன்,தி.மு.க.நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.