உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்

வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையொட்டி நேற்று கோமாதா பூஜை, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று அருள்தரும் ஐயப்ப சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ