உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருப்பதி-மன்னார்குடி ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல மனு

திருப்பதி-மன்னார்குடி ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல மனு

பண்ருட்டி: திருப்பதி- மன்னார்குடி ரயிலை பண்ருட்டியில் நிறுத்தக் கோரி, ரயில் உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள், கோரிக்கை வைத்துள்ளனர்.பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் சுபாஷ், செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் அருணாசலம் ஆகியோர், சென்னை தலைமை ரயில்வே அலுவலகத்தில் துணை தலைமை இயக்கவியல் மேலாளர் ஜெரின்ஆனந்தை சந்தித்து மனு அளித்தனர்.அதில், திருப்பதி -- மன்னார்குடி, மன்னார்குடி- திருப்பதி ரயில்களை பண்ருட்டி ரயில் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தாம்பரம் -- விழுப்புரம் ரயிலை பண்ருட்டி, நெல்லிக்குப்பம் வழியாக கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை