உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

 இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

கடலுார்: இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கடலுார் அன்னவல்லி கிராமத்தைச் சேர்ந்த மோகனநாயகி தலைமையில் திருநங்கைகள் அளித்த மனுவில்; கடலுார் மாநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திருநங்கை என்பதால் எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை. இதனால் வசிப்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்