உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திட்டக்குடி: கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில், வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 29.72 (2580 கனஅடி) அடியில், தற்போது 19.00 (846.77கனஅடி) அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலையில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். தாசில்தார் உதயகுமார், உதவி செயற்பொறியாளர் பிரசன்னா முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி பொறியாளர்கள் சுதர்சன், செந்தில்நாதன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் மருதாசலம், முன்னோடி விவசாயிகள் பரமசிவம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். வினாடிக்கு 90 கன அடி வீதம், 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி தாலுகாவில் உள்ள, 5 பாசன ஏரிகள் மற்றும் 21 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய், 2 கிளை வாய்க்கால்கள் மூலம் 8268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை