உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நெய்வேலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நெய்வேலி : நெய்வேலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார், அமைச்சர் கணேசன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் 240 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பொது சுகாதாரம் மூலம் 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண் துறையின் கீழ் 44 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 14 பயனாளிகளுக்கு தொழில் கடன் வசதி, உள்ளிட்ட சுமார் 964 பயனாளிகளுக்கு ரூ.10.28 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், கடலுார் டி.ஆர்.ஓ.,ராஜசேகர், ஆர்.டி.ஓ.,அபிநயா மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்