| ADDED : ஜன 11, 2024 11:47 PM
கடலுார்: இரண்டாவது திருமணம் செய்ததை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய கணவர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுார் அடுத்த மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கும் கடலுார், செல்லங்குப்பம் திவ்யா, 28; என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், பெங்களூருவில் கோழி பண்ணையில் மேனேஜராக பணிபுரியும் முத்துகிருஷ்ணன், தன்னுடன் பணிபுரியும் பூஜா என்பவரை, கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட திவ்யாவை, முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை முருகன், தாய் மரகதம், பூஜா ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, கொடுமைப்படுத்தினர்.இதுகுறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து முத்துகிருஷ்ணன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.