மேலும் செய்திகள்
தீக்காயமடைந்த பெண் சாவு
30-Sep-2025
கடலுார் கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி கலைவாணி,57; இவர் கடந்த 20ம் தேதி தனது வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிய போது, அவரது ஆடையில் தீப்பிடித்தது. படுகாயமடைந்த அவர், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Sep-2025