உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் கிரைண்டரில் மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி செல்வி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி