கிரேன் மோதி தொழிலாளி பலி
கடலுார்: கிரேன் மோதி கூலி தொழிலாளி இறந்தார்.கடலுார், முதுநகர் அடுத்த வள்ளி காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து, 65; கூலி தொழிலாளி. இவர், நேற்று அங்குள்ள ரயில்வே கேட் அருகில் நடந்து சென்றபோது, எதிரில் வந்த கிரேன் மோதியது. படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக கூறினர்.புகாரின்பேரில், சிதம்பரம் அடுத்த மேல் அறுகம்பட்டை சேர்ந்த கிரேன் டிரைவர் சிவானந்தன், 31; என்பவர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.