உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு

அரூர் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி கல்லாற்றில், மழை காலங்களில் அதிகளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம், புதுார் கோட்டசரடு, மங்களப்பட்டி, கோட்டப்பட்டி, சூரநத்தம், செங்கான்டிப்பட்டி, கட்டகாடு உள்ளிட்ட, 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். எனவே, காட்-டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை