உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி

சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி

கரூர், கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் சாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 70; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செங்காத்தனுார் பிரிவில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக புஞ்சை தோட்டக் குறிச்சியை சேர்ந்த, முருகேசன், 61; ஓட்டி சென்ற பைக், செல்வராஜ் மீது மோதியது. கீழே விழுந்த செல்வராஜ், தலையில் அடிப்பட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செல்வராஜின் மகன் ரமேஷ் பிரபு, 39; கொடுத்த புகாரின்படி, வேலாயு தம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்