உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்

அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்

அரூர்: அரூரில் இருந்து சேலம், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்-புறங்களுக்கு தினமும், 35க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எந்தவிதமான கட்டுப்பாடு-களும் இன்றி, அசுர வேகத்தில் வருகின்றன. குறிப்பாக, அரூர் நகருக்குள் டூவீலர்களில் செல்பவர்கள் மீது மோதுவது போல் வருவதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்லும் நிலையுள்ளது. மேலும் சில தனியார் பஸ்களில் விதிமுறைகளுக்கு மாறாக, அதிக ஒலியெழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால், இரு-சக்கர வாகனங்களில் செல்வோர் அதிர்ச்சியில் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, வேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி