உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், எட்டு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நாளை நடக்க உள்ளது.இந்தாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நடக்கவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு, 8 மையங்களில் நடக்க உள்ளது. இதில், தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில், 1,224 பேர் தேர்வு எழுத உள்ளனர். தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள டான் சிக்சாலயா பப்ளிக் பள்ளியில், 1,200 பேர், ஸ்ரீவிஜய் வித்யாஸ்ரம் சீனியர் செகன்டரி பள்ளியில், 1,152 பேர்.நல்லானுார் ஜெயம் இன்ஜினியரிங் கல்லுாரியில், 504, பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள விஜய் மில்லினியம் பள்ளியில், 456, வாரியார் பள்ளியில், 384, செட்டிக்கரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில், 360, பாலக்கோடு சாலையில் உள்ள கமலம் இன்டர்நேசனல் பள்ளியில், 478 பேர் என, தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 5,758 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை