உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், சித்தேரி சாலையில், வள்ளிம-துரையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு அரூர் எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக நொரம்பு மண் ஏற்றி வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி, அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், வள்ளிமதுரையை சேர்ந்த அண்ணாமலை என்பவரது விவசாய நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம், அனுமதி-யின்றி மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிப்பர் லாரி ஓட்டுனர்கள் ஈட்டியம்பட்டி பூ நகரைச் சேர்ந்த பார்த்தீபன், 46, கருங்கல்பாடி வெங்கடேசன், 28, செங்கலேரியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்ப-ரேட்டர் முத்துசாமி, 32, ஆகிய, 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை