உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 58-வது தேசிய நுாலக வாரவிழா

58-வது தேசிய நுாலக வாரவிழா

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும், 58-வது தேசிய நுாலக வாரவிழா நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமையில் புத்தக கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. முதல் நிலை நுாலகர் மாதேஸ்வரன் வர-வேற்றார். தகடூர் புத்தகப் பேரவை செயலாளரும், வாசகர் வட்ட தலைவருமான செந்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்-ததார். அதை தொடர்ந்து, தேசிய நுாலக வாரவிழா கொண்டாடு-வதின் நோக்கம் மற்றும் புத்தகம் வாசிப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு அவர் எடுத்து கூறினார். வாசகர் வட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் பழனி போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பல்-வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை