மேலும் செய்திகள்
மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு
02-May-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த உழவன் கொட்டாயை சேர்ந்தவர் பெரியசாமி, 37, ஆட்டோ டிரைவர்; இவர் கடந்த, 22ல் மாலை, 4:15 மணிக்கு தன் நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவி பிரதீபா, 33, புகார் படி, அதியமான் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
02-May-2025