பிறந்து 15 நாளில் குழந்தை சாவு
அரூர்: அரூர் அடுத்த காட்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் எம்.ஜி., 38, கூலித்தொழிலாளி; இவரது மனைவி புஷ்பா, தம்பதிக்கு ஏற்கனவே, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பாவிற்கு கடந்த, ஜூலை, 26ல் பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 9ல் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அரூர் ஜி.ஹெச்.,ல் அனுமதிக்கப்பட்டது. அங்கு, குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.