உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க பரிசல் இயக்க 3வது நாளாக தடை

ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க பரிசல் இயக்க 3வது நாளாக தடை

ஒகேனக்கல், கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளது. நேற்று, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு, 1.10 லட்சம் கன அடி உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, அதே அளவில் நீடித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் பாறைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் யாரும் இறங்காதவாறு ஆலம்பாடி, நாடர் கொட்டாய், ஊட்டமலை, சத்திரம், ஒகேனக்கல் பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை, 3வது நாளாக தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை