உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல்,பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் முன்னா, 30. பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள், 8 பேருடன், ஒகேனக்கல் சுற்றுலா வந்துள்ளார். ஊட்டமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது முன்னா, ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.சம்பவ இடம் வந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மற்றும் பரிசல் ஓட்டிகள் உதவியோடு தேடி வந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் நேற்று செங்கப்பாடி பகுதி ஆற்றில் அவரை சடலமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ