எரிந்த நிலையில் ஆண் சடலம்
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, முதுகம்பட்டி வனப்பகுதி தரைப்பா-லத்தின் அருகில் இருந்த குப்பையில், 40, வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்தது. முகம், கை, கால்கள் முழுவதும் கருகியதால், இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை.இது குறித்து, கூக்குட்ட மருதஹள்ளி வி.ஏ.ஓ., அமுதா பென்னா-கரம் போலீசில் புகார் அளித்தார். இதில், தீயில் எரிந்து கருகியவர் தவறி விழுந்து இருந்தாரா அல்லது வேறு இடத்தில் இறந்தவரை குப்பையில் போட்டு எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.