அரசு ஊழியர் சங்கம் 15 -வது மாவட்ட மாநாடு
அரசு ஊழியர் சங்கம்15 -வது மாவட்ட மாநாடுதர்மபுரி, டிச. 2-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, 15வது மாநாடு தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் துவக்கி வைத்து பேசினார்.இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மறைவிற்கு பின், கருணை அடிப்படையில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுப்பதை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைசெயலாளர் ஜெயவேல் நன்றி கூறினார்.