உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை

ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி, அழகாபுரியை சேர்ந்தவர் ராஜராஜன், 55; டெய்லர். நேற்று முன்தினம் வீட்டருகே தென்னந்தோப்பில், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் வரை இழந்ததால், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது.வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'ஆன்லைன் ரம்மி விளையாட பலரிடம், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இவருக்கு மனைவி தனலட்சுமி, இரண்டு மகள்கள் உள்ளனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்