உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாகத்து அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாகத்து அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கீழ்ஈசல்பட்டியில், நாகத்து அம்மன் கோவில் உள்ளது. இங்கு நவ., 3 அன்று கொடியேற்றத்துடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர், மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு, நாகத்து அம்மன் விமான கோபுரம் மற்றும் மூலவர், பாரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில், கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி, பூரிக்கல், பரிகம், ஜருகு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை