மேலும் செய்திகள்
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க, குளிக்க தடை
14-Oct-2024
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்ததால், நேற்று, 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடித்தது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் தமிழக காவிரி நீர்ப்பி-டிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் பகுதிகளில் பெய்த மழையால், ஒகே-னக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்-லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து, 4வது நாளாக காவிரியாற்றில் பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.
14-Oct-2024