உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி

தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி

அரூர்: அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் இளவரசன், 32. இவர், ஊத்தங்கரையிலுள்ள தனியார் வங்கியில் உதவி மேலாள-ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு, 8:30 மணிக்கு ஊத்தங்கரையில் இருந்து, அரூருக்கு சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் வந்தார்.அரூர் -ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே, சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாய-மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை