உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

அரூர்: அரூரில், இந்திய குடியரசு கட்சியின், தர்மபுரி மாவட்ட நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் ஜான்சன்பாபு ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கரூரில் நடந்த பெருந்துயரம் மீண்டும், நடக்காமல் தடுக்க, அரசு முன்னேற்பாடுகள் மேற்-கொள்ள வேண்டும்.அரூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்கு மறைந்த இந்திய குடியரசு கட்-சியின், மாநில தலைவர் கரியமால் பெயர் சூட்ட வேண்டும். அரூர் அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இரவு நேரங்-களில், அரூர் - தர்மபுரிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் கோவிந்தன், பிலவங்கன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை