வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணை அருகே நாகராஜபு-ரத்தை சேர்ந்தவர் பழனி, 21. தனியார் வங்கி கலெக்சன் ஊழியர். நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டையில் கலெக்சனை முடித்து விட்டு, வீட்டிற்கு யமகா எப்.இசட் பைக்கில் சென்றார். இரவு, 7:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில், தண்டரை பிரிவு ரோடு அருகே எதிரே வந்த டாடா சுமோ வாகனம் பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பழனி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.சூளகிரி அருகே, ஒமதேப்பள்ளியை சேர்ந்தவர் பைரப்பா, 52, விவசாயி. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, அவரது விவசாய நிலத்தில் பணியாற்றி வந்த டிரைவர்களுக்கு டீ வாங்க சென்றார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை, ஒமதேப்பள்ளி பவர் கிரேடு மின்வாரிய அலுவலகம் அருகே கடக்க முயன்ற-போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பைரப்பா உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.