உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டூவீலர்கள் திருடியவர் கைது

டூவீலர்கள் திருடியவர் கைது

காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சபரிநாதன், 22. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 25ம் தேதி காலை, 7:00 மணிக்கு, பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்த அவரது மொபட்டை காணவில்லை. காரிமங்கலம் அடுத்த ஏரியின் கீழுரை சேர்ந்தவர் விஜயகுமார், 37, டிரைவர்; இவர், கடந்த, 25ம் தேதி மாலை, 4:30 மணிக்கு காரிமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மாயமானது. இருசம்பவங்கள் குறித்தும், காரிமங்கலம் போலீசார் விசாரித்து, ஓசூர் பேடரபள்ளியை சேர்ந்த சுரேஷ், 36, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி