மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு சீருடை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு மாதிரி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, அரசு மற்றும் அரசு மாதிரிப்பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்ற, 18 மாணவர்களுக்கு மருத்துவ சீருடை, ஸ்டெதஸ்கோப் வழங்கினார். மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.