உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வுக்கு வி.சி., எதிர்ப்பு

 அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வுக்கு வி.சி., எதிர்ப்பு

அரூர்: அரூரில், அம்பேத்கர் சிலைக்கு, பா.ஜ.,வினர் மாலை அணிவிப்பதற்கு, வி.சி., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று காலை, 11:30 மணிக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., செயலர் சாக்கன் சர்மா தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, அரூர் நகர, பா.ஜ., தலைவர் ரூபன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் கலையரசன் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். இதற்கு, சாக்கன் சர்மா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால், பா.ஜ., - வி.சி., கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தினார். இதையடுத்து, 12:05 மணிக்கு, பா.ஜ.,வினர் மாலை அணிவிக்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதியம், 1:20 மணிக்கு திரும்பி வந்த, பா.ஜ.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ