| ADDED : ஏப் 16, 2024 06:45 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஓட்டுப்பதிவு மைய பாதுகாப்பு பணிக்காக 1272 போலீசாருக்கு கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி , போலீஸ் பார்வையாளர் மனோஜ்குமார் , எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் ,தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் உள்ள 290 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 133 , பழநியில் உள்ள 323 மையங்களுக்கு 159 , ஒட்டன்சத்திரத்தில் 282 மையங்களுக்கு 186 , ஆத்துாரில் 191, நிலக்கோட்டைக்கு 159, நத்தத்திற்கு 214, வேடசந்துாரில் 130 என மாவட்டத்தில் உள்ள 2121 ஓட்டுச்சாவடிகளின் பாதுகாப்பு பணிக்காக 1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.