பஸ் ஸ்டாண்ட் கடைக்கு சீல்
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்தமாக கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் முறையாக பல கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் இருப்பதால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று வாடகை செலுத்தாத 2 கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.