உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்ன வெங்காயத்திற்கு விலை இல்லை; சேமிக்கும் விவசாயிகள்

சின்ன வெங்காயத்திற்கு விலை இல்லை; சேமிக்கும் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்காததால் பட்டறைகளில் சேமித்து வருகின்றனர்.ஒட்டன்சத்திரம், புலியூர் நத்தம், முத்துநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, இடையகோட்டை அம்பிளிக்கை காவேரி அம்மாபட்டி சுற்றிய பகுதிகளில் வைகாசியில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது. 60 நாட்கள் பின் தற்போது விளைச்சல் அடைந்துள்ள நிலையில் அறுவடை பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ.20 முதல் 35 வரை விற்பனையாகிறது. உரங்கள் விலை, நடவு, அறுவடை கூலி உயர்ந்துள்ளதால் இந்த விலை கட்டுபடியாகவில்லை. இதனால் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை மூங்கில் பட்டறைகளில் சேமித்து நல்ல விலை கிடைக்கும் போது விற்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.புலியூர் நத்தம் விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது: சின்ன வெங்காயம் நடவு கூலியாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.500 ,அறுவடைக்கு ரூ.350 கொடுக்க வேண்டியுள்ளது. இத்துடன் உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக வெங்காயம் விலை கட்டுபடியாக வில்லை . இதனால் பட்டறைகளில் சேமித்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !