உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அகற்றப்படாததால் குவியும் குப்பையில் மேயும் கால்நடைகள்

அகற்றப்படாததால் குவியும் குப்பையில் மேயும் கால்நடைகள்

கொடைக்கானலில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பை சேரும் நிலையில் அவை தனியார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் முகாமிட்ட நிலையில் இங்குள்ள விடுதிகளில் சேர்ந்த குப்பை ரோட்டோர குப்பைத் தொட்டிகளில் குவிக்கப்பட்டன. அள்ளப்படாத நிலையில் கால்நடைகள் உண்ணும் அவலம் நீடிக்கிறது. கால்நடைகள் பிளாஸ்டிக் உணவுப் பொட்டலங்களை உண்பதால் செரிமான பிரச்னையால் பலியாகும் அபாயம் உள்ளது. குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த நகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை