| ADDED : மே 30, 2024 04:10 AM
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்திண்டுக்கல் : திண்டுக்கல் வழக்கறிஞர் விஜயகுமார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யாத போலீசாரை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி,இணை செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.மாநகராட்சி விழிப்புணர்வுதிண்டுக்கல் :திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் லட்சுமணபுரத்தில் குப்பையை தரம் பிரித்து வழங்குதல், வீட்டு தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தத. கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பொறியாளர் சுப்பிரமணியன்,சுகாதார அலுவலர் செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன்,கீதா பங்கேற்றனர்.தியாகிகள் தினவிழாதிண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் தெற்கு ரத வீதி பஜனைமட அலுவலகத்தில் தியாகிகள் தினவிழா கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். செயலாளர் தங்கபாண்டி வரவேற்றார். பொதுசெயலாளர் காளிதாஸ் பேசினார். நிர்வாகிகள் நாகரத்தினபாண்டி, எழுமலை, சங்கரன், திருமுருகன், அருணகிரி, பத்மநாபன் பங்கேற்றனர். மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் விழா ஏற்பாடு செய்தார். செயலாளர் மோதிலால் நன்றி கூறினார். அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டி பழநி :பழநி சன்னிதி வீதியில் உள்ள மாவட்ட அருங்காட்சியகத்தில் மே 27,28,29 என மூன்று நாட்கள் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன், அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் பங்கேற்றனர்.பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் திண்டுக்கல்: மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டிற்கான பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. பள்ளி திறக்கப்படும் ஜூன் 6ல் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.மைதானங்களில் ஆய்வுதிண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்கள்,பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் மாநகராட்சி நகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து,குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.