உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி

மரத்தில் டூவீலர் மோதி இருவர் பலி

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே வங்கமனுாத்தில் மரத்தின் மீது டூவீலர் மோதி இருவர் பலியாயினர்.சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி சத்தியமூர்த்தி 20. இவருடன் நண்பர்களான அய்யலுாரை சேர்ந்த சசிக்குமார் 19, அதே பகுதி பிரதீப் 18, ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) செங்குறிச்சி ரோட்டில் சென்றனர்.சசிக்குமார் வண்டி ஓட்டினார். வங்கமானுாத்து வந்தபோது நிலைதடுமாறிய டூவீலர் சாலையோர தென்னை மரத்தின் மீது மோதியது. சத்தியமூர்த்தி, சசிக்குமார் இறந்தனர். காயமடைந்த பிரதீப் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாணார்பட்டி எஸ்.ஐ., பரமசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை