உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 14 செம்மறி ஆடுகள் பலியாகின.பாறைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வரதராஜ் 75. இவர் நேற்று காலை கம்பி வேலி போட்ட தனது நிலத்தில் 14 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். காலை 9:30 மணிக்கு அங்கு புகுந்த தெரு நாய்கள் ஆடுகளை கடித்ததில் 10 ஆடுகள் இறந்தன. இதே போல் இவரது தம்பி ரங்கராஜ் 70, அருகில் உள்ள தியாகுவுக்கு சொந்தமான நான்கு ஆட்டுக்குட்டிகளும் நாய்கள் கடித்ததில் இறந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை