மேலும் செய்திகள்
தொழிலாளி கொலையில் வாலிபருக்கு ஆயுள்
05-Dec-2024
வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
12-Nov-2024
திண்டுக்கல்: கல்லுாரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் அனுமந்திராயன்கோட்டை பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் 20. இவர் 2019 ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்தார். தொடர்ந்து அம்மாணவியை விருதுநகரில் வாடகை வீட்டில் வைத்திருந்தார். போலீசார் மாணவியை மீட்டு சசிக்குமார்,அவருக்கு உதவிய பெற்றோர் பாலசுப்பிரமணி,சித்ராவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சசிக்குமாருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், அவரது பெற்றோரை விடுதலை செய்தும் நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார்.
05-Dec-2024
12-Nov-2024