8 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல், : திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், சண்முகா ஆனந்த் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பழநி ரோடு, நத்தம் ரோடு, பழைய கல்லுாரி ரோடு, சக்தி டாக்கீஸ் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இன்றி பயணிகளை ஏற்றி வந்த 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதோடு ரூ.1.15 லட்சம் அபராதம் விதித்தனர்.