உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்

கொடை வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்

கொடைக்கானல் : கொடைக்கானல் வனப்பகுதியில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.பெருமாள் மலை பாரதி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் 53. இவர் பாம்பார்புரம் எதிரே உள்ள வனப்பகுதியில் கல்பாசம் , இலை, தலைகளை சேகரிக்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடினர். பாம்பார்புரம் வனப்பகுதியில் பின் தலையில் காயம் அடைந்த நிலையில் பழனியம்மாள் இறந்து கிடந்தார். பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி