குறிஞ்சியாண்டவர் கோயிலில் அன்னதானம் திட்டம் துவக்கம்
கொடைக்கானல்: பழநி முருகன் கோயிலின் உபகோயிலான குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள்தோறும் அன்னதானத் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் சீனிவாசகம்,பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவல் குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றனர். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நடக்கும் ராஜகோபுர பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.