காமாட்சி கோயிலில் வருடாபிஷேகம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்த நிலையில்இதை முன்னிட்டு யாகங்கள் நடந்தன. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் காமாட்சி அம்மன் ,ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் அன்னலட்சுமி, ஆன்மிக பெரியோர்கள் கலந்து கொண்டனர்.