உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லஞ்ச வழக்கில் அமலாக்க அதிகாரிக்கு ஜாமின் மறுப்பு

லஞ்ச வழக்கில் அமலாக்க அதிகாரிக்கு ஜாமின் மறுப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 2வது முறையாக ஜாமின் வழங்க தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுத்து விட்டது.டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக்கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கடந்தாண்டு டிச.,1ல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது 4வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார்.கடந்த ஜன., 30ல் அங்கித்திவாரி தரப்பு வழக்கறிஞர் செல்வம் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2வது முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தையும் கேட்ட நடுவர் மோகனா, உச்ச நீதிமன்றம் அங்கித்திவாரியை புலன் விசாரணை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற அடிப்படையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி