கொடையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கொடைக்கானல்: அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் இருவாரங்களுக்கு முன் தடுப்புசுவர் சேதமடைந்தது. சீரமைக்க வலியுறுத்தியும் சரி செய்யவில்லை. இதை கண்டித்து பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் மதன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி அதிகாரிகள் இரு தினங்களில் சரி செய்வதாக கூற கலைந்து சென்றனர். தொடர்ந்து சீரமைக்காத நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கும் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.